|
’தி லெமன் ட்ரீ’ ( The Lemon Tree )
பாலஸ்தீன கணவனையிழந்த பெண் சல்மா (நடிகை ஹியாம் அப்பாஸ்). தன் அப்பா விட்டுச் சென்ற பெரிய அழகான அடர்த்தியான எலுமிச்சைத் தோட்டத்தை தன் உயிருக்கு நிகராக போற்றி பராமரித்து வருகிறாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானமே அவளின் ஜீவாதாரம். இவ்வாறு இருக்கையில் அந்த நாட்டின் முக்கிய குடிமகனான பாதுகாப்பு அமைச்சரும் அவரின் மனைவியும் மிராவும் பக்கத்து வீட்டுக்கு குடியேறுகிறார்கள். தன் அண்டை வீட்டில் பெரிய எலுமிச்சை தோட்டம் இருப்பதை கண்ணுற்ற மிரா அதைப் பார்த்து அதன் அழகில் பரவசப்படுகிறாள், ஆனால் அவள் கணவனோ அடர்ந்த சிறிய காடு போலிருக்கும் அத்தோட்டம் தனக்கு பாதுகாப்பானது அல்ல, எதிரிகள் யாரேனும் மறைந்து தங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்க நேரிடலாம் எனச் சந்தேகம் கொள்கிறான். வீட்டின் கிரகப்பிரவேச தினத்தை குறித்த கையோடு அத்தோட்டத்தை அழிக்கச் சொல்லிவிடுகிறான். தன் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்களை சல்மா கடிந்த போது அவர்கள் அவளை தோட்டத்திலிருந்து வெளியேற சொல்கிறார்கள். மனத் துயருடன் உறக்கம் வராத இரவை எப்படியோ கடக்கிறாள். என்ன ஆனாலும் சரி தன் தோட்டம் அழிக்கப்படக்கூடாது என உறுதியுடன் அவள் போராட்டத் துவங்குகையில் சட்டம் எனும் துப்பாக்கியால் அவள் மென் இதயத்தை துளையிடுகிறார்கள் பாதுகாப்பு அமைச்சரின் வீரர்கள். எலுமிச்சை மரமோ தனி மனித எதிர்ப்புக் குரலோ எதுவாயினும் அது அழிக்கப்படவேண்டியது என்பது அமைச்சரின் நிலைப்பாடு. ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கையின் கசப்பை சல்மா வெறுப்பினூடே ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறாள். வேறு வழியில்லை, இங்கு வாழ்க்கை இவ்விதம்தானே?அமைச்சரின் மனைவி மிராவாக நடித்துள்ள ரோனா லிபாஸ் சிறப்பாக நடித்துள்ளார். தன் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் மீது பரிவு ஏற்பட்டு அவள் படும் துயரங்களை தூரத்திலிருந்து பார்த்து மனம் கலங்குகிறாள் மிரா. ஆனால் மிராவின் மீது சல்மாவிற்கு நம்பிக்கை இல்லை. சல்மாவின் பார்வையில் அவள் அதிகார மையத்தின் ஓர் அங்கம். மிரா ஓரிரு சந்தப்பங்களில் அவளிடம் பேச முன் வருகையில் சல்மா எட்டியே நிற்கிறாள். மிரா வீட்டுக் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் சமையல்காரரின் கவனக் குறைவால் எலுமிச்சை பழம் வாங்கப்படவில்லை. வேறு வழியின்றி அவர்கள் பக்கத்துத் தோட்டத்தில் பழத்தை பறிக்கிறார்கள். அதைப் பார்த்த சல்மா தன் தோட்டத்தை அழிக்கச் சொன்னதுடன் அதிலிருந்து திருடுகிறீர்களே என சத்தம் போடுகிறாள். அப்போதும் அவள் வன்முறையாக அனுப்பப்படுகிறாள். நடந்த சம்பவத்திற்கு மிரா அவளிடம் மன்னிப்புக் கேட்க பூட்டியிருந்த கேட் ஏறிக் குதித்து சல்மாவின் வீட்டுக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு வீரன் ஒருவனால் தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறாள். கனத்த மனதுடன் அவள் பத்திரிகை ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் தங்கள் தவறுகளால் அப்பாவிப் பெண்ணொருத்தியின் வேதனையப் பற்றிக் மனம் திறந்து பேசவே அது பரபரப்புச் செய்தியாகிவிடுகிறது. சஞ்சிகையில் தன்னைப் பற்றி தன் மனைவியே அவதூறாகச் சொல்லியிருப்பதை வாசித்த அமைச்சரும் அவர் வட்டாரமும் பெரும் கோபத்துக்குள்ளாகிறார்கள். மனைவியை மிரட்டி தான் சொன்ன கருத்துக்கள் உண்மையில்லை என்று வாபஸ் வாங்க வைக்கிறான். வேறு வழியில்லாமல் மிரா அதற்கு உடன் படுகிறாள். இறுதியில் தன்னுடைய எதிர்ப்பை வீட்டை விட்டு வெளியேறுவதின் மூலம் காட்டுகிறாள். அவளால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை. http://www.lemontreemovie.com/lemontree_en.html Nove 2009 |
| Name November 16, 2009 12:05 PM PST Dear shakthi please contact y phone number or Email adress vesthervijith@yahoo.com | ||
| Name November 16, 2009 11:45 AM PST wow really great please can you send this film CD to me i am Esther vijithnandakumar No 40 Sivan Street Trincomalee Srilanka 0713039346 | ||
| Leave a Comment: |