Wednesday, December 05, 2007
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)
ஒரு குரலின் குயில்
பத்திலொரு நூற்றாண்டாய்
படித்துக் காட்டுகின்ற என் கவிதை
காத்திரமான இப்பூவுலகில்
நித்தியமான என் அன்பை
மதித்திடத் தெரியாமல் - நீ
மிதித்துக் கொண்டோடுவது எங்கே சொல் ...
உடைந்த இதயம்
நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்
இனிய நண்பனாக வந்து
ஒட்டும் போது நான்
உணரவில்லை என்றாவது
நீயும் உடைப்பாயென்று
dec 07