A TAMIL E-ZINE FOR WOMEN'S WRITINGS, ARTS & LITERATURE              
Best Viewed on Internet Explorer

font type:
tamil unicode

பதிப்பு:
2005 June

editors:
ranji(swiss)
deva(germany)

email:
udaru@bluewin.ch



make a comment

உங்கள் பதிவை தமிழ் யுனிகோட் இல் எழுதிக்கொள்ளுங்கள். நன்றி.

எழுத்துருமாற்றி
நன்றி: சுரதா.கொம்



Sunday, September 07, 2008
kavithai thillai

தில்லை (சுவிஸ்)

பொட்டை முடிச்சு

 நூற்றாண்டின் இரவுகளை முடிச்சவிழ்க்கிறேன்
 இத்தும் புரிபிஞ்சும்
 அசவின் கயிறுகள்.
 உயிரின் சுவைகொண்ட
 இரத்தத்தை நக்கியும்
 கொடுவலிகளைக் குடித்தும்
  பாய்கள்.
 விந்தூறி நனைந்தும்
 சாயம் வெழுத்தும்
 எனது தலைமுறைகளின்
 அசவு.
 இறுகியும் இறுக்கியும்
 பொட்டைமுடிச்சு.
 தகப்பன்கள்
 கணவன்கள்
 மகன்கள்
 தலைமுறைகளின் ஆதிக்கம்... 
 எனது தாய் தனது 
 சேலைத்தலைப்பில் முடிந்துவைத்திருக்கும்
 சில்லறைகளாய்.  

(06.09.2008)

Sep 2008

comments  

Friday, September 05, 2008
film olga

ஒல்கா

நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன்

உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே மாவீரர்களைப் பற்றித்தான் அதிகம் கதைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வீராங்கனைகளைப் பற்றிக் கதைப்பதற்குத் தயக்கமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். பொதுவாக இந்தச் சமூகக் கட்டுப்பாட்டுள் இருந்து வெளிப்படுத்தப்படாமற் போன எத்தனையோ வீராங்கனைகளின் செயற்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன, மறக்கடிக்கப் பட்டுள்ளன. பெண்களின் எழுச்சி சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிய எல்லா தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும், ஜனநாயகப் போராட்டங்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில் தேசிய விடுதலைக்கான போராட்டங்களில் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து உயர்வர்க்கப் பெண்களும் பங்கு கொண்டுள்ளார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய குரல் ஓங்கி ஒலித்த சந்தர்ப்பங்கள் அனேகம். இவ்வாறு சமூகத்தின் வளர்ச்சிக்காக, மாற்றத்திற்காக. முன்னேற்றத்திற்காகக்;குரல் கொடுத்த, போராடிய பல பெண்களின் குரல் வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது. இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்ணியலாளர்கள் இந்த மறைக்கபட்ட வரலாற்றை மீள் கண்டுபிடிப்புச் செய்வதிலும், வரலாற்றை மீள எழுதுவதிலும் அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் 1923 தொடக்கம் 1942 வரை, புரட்சிக்காக தனது உயிரை கொடுத்த பெண் புரட்சியாளினியும், பிரேசிலினால் ஹிட்லரின் கொலைவெறிக்கு பரிசளிக்கப்பட்டவருமான ஒல்கா பெனாரியோவின் வரலாற்றில் முடிந்து போன, மறந்து போன, ஒரு அத்தியாயத்தைப் புதுப்பிக்கும் வகையிலும், வரலாற்றை மறுவார்ப்புச் செய்யும் வகையிலும் திரைப்படமாக்கியுள்ளார் நெறியாளர் ஜெமி மொன்யர்டிம்.பெர்னாண்டோ மொறாய்ஸ் என்கிற பிரேசிலிய ஊடகவியலாளரால் எழுதப்பட்ட ஒல்கா பெனாறியோ என்ற கொம்யூனிஸ புரட்சியாளினியின் வாழ்க்கை வரலாற்று நூலை றீற்ரா பூஸார் திரைக்கதையாக எழுதி படத்தைத் தயாரித்திருக்கிறார். (றீற்ரா பூஸார் ஸ்பானியத் தொலைக்காட்சிக்காக கப்ரியேல் கார்சியா மார்க்கியூஸ் உடன் இணைந்து அமொரேஸ் பொஸிபிள்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியவர்). இதனை நெறியாள்கை செய்துள்ளார் பிரேசிலின் ஜெமி மொன்யர்டிம். இத்திரைப்படம் 2004 ஓகஸ்டில் பிரேசிலில் திரையிடப்பட்டது. அதேவேளை இதே ஆண்டு டிசம்பர் மாதம் ஒல்கா பெனாரியோ பற்றிய விவரணத் திரைப்படம் ஹாலிப் லீற்றனிரால் எழுதி, நெறியாள்கை செய்யப்பட்டு ஜேர்மனியில் திரையிடப்பட்டிருக்கிறது.

ஜேர்மனியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுக் குரலாகவும், ரஷ்யாவிலும், பிரேசிலிலும் புரட்சிகர யுத்தத்தில் பங்குகொண்டவரும், கொம்யூனிஸ்டுமான ஒரு ஜேர்மனிய யூதப் பெண்ணான ஒல்காவின் வாழ்க்கையும், வீரஞ் செறிந்த அவளது செயற்பாடுகளும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் புரட்சிகரப் பெண்களை எம் கண்முன் நிறுத்தும் வகையில் சிறப்பாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கிறது இத் திரைப்படம். ஜேர்மனியில் சமூக ஜனநாயக வழக்கறிஞரான யூத தந்தைக்கும், ஜேர்மனிய உயர்வர்க்கத்தைச் சேர்ந்த தாய்க்கும் 1908ஆம் ஆண்டு மகளாகப் பிறந்த ஒல்கா பெனாறியோ, 1923ஆம் ஆண்டு தனது 15ஆவது வயதிலேயே சர்வதேச கொம்யூனிஸ இளைஞர் பேரவையில் இணைந்தாள். 1926 ஆம் ஆண்டு தன்னுடைய தலைமையில் பேராசிரியரும், ஜேர்மனிய கொம்யூனிஸ்ட்டுமான தோழர் ஓட்டோ ப்ரோனை ( ஓட்டோ ப்ரோன் இவளது காதலனும் கூட) பெர்லின் மொபிற் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க வைத்து கூட்டிச் செல்கின்றாள்.

படம் தொடங்கும் பொழுதே “நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன் அப்பா” என்றபடி நெருப்பைத் தாண்டும் சிறு வயது ஒல்காவின் தைரியமும், “எனக்கு என்ன தேவையென்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு என்ன தேவையில்லையென்று எனக்குத் தெரியும்” என்று கூறி வீட்டை விட்டு வெளியேறும் அவளது துணிவும், திடமும் படம் முடிவடையும் வரை வளம் குன்றாமல் அதே ஸ்திரத்தன்மையுடன் பேணப்படுகிறது. பேச்சுத் திறமையும், முழுமையான இராணுவப் பயிற்சியும், எந்தச் செயலையும் தானாகத் திட்டமிட்டுத் திறம்படச் செய்யும் செயற்பாடும் கொண்ட ஒல்காவிடம், பிரேசிலின் கொம்யூனிஸ்ட்டான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் ஐ பாதுகாப்பாக பிரேசிலில் கொண்டு போய்விடும் பணி ஒப்படைக்கப்படுகிறது.

பிரேசிலின் கொம்யூனிஸக் கட்சியின் தலைவரான லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் அப்போதைய பிரேசிலின் ஜனாதிபதியான சர்வாதிகாரி வார்காஸ் இன் அரசாங்கப் படைகளுக்கெதிராக புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும் குரல் கொடுத்தவர். எங்கு சென்றாலும் எல்லோராலும் “நம்பிக்கையின் நம்பிக்கை” என்று அழைக்கப்பட்டவர். அந்தளவு திறமை வாய்ந்த ஒரு தலைவருக்கு மெய்ப்பாதுகாவலாளியாகச் செல்லும் பொறுப்பை ஒல்கா ஏற்றுக் கொள்கிறாள். 'நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, நான் உங்களைப் பத்திரமாக பிரேசிலில் கொண்டு போய் விடுவேன' என்ற உறுதிமொழி ஒல்காவால் வழங்கப்படுகிறது. அவளுடைய துணிவும், தன்னம்பிக்கையும் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்க்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

இருவரும் தமது தேனிலவை சந்தோசமாகக் கழிக்கச் செல்லும் பணக்காரத் தம்பதிகள் போல வேடமிட்டு பிரேசிலை நோக்கிய் பயணத்தை மேற்கொள்கிறார்கள். எல்லாவிதத்திலுமே ஒ;த்துப் போகும் தன்மையுள்ள இருவருக்கிடையிலும் மெல்ல மெல்ல காதல் ஏற்படுகிறது. அந்த உறவினைக் கூட மிகுந்த மென்மையான, அழகியல் தன்மையுள்ள, கதையின் முக்கிய பகுதிகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், எந்தவித விரசமுமற்று எடுத்துச் சொல்கிறார் நெறியாளர்.இறுதியில் அழகும், ரம்மியமுமிக்க இலத்தீன் அமெரிக்காவின் ஒரு பகுதியான பிரேசிலுக்கு பாதுகாப்பாக வந்து சேருகிறார்கள். ஆனால் லூயிஸ் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ் நாடு திரும்பியிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்படுகிறது. இவ்விடயம் வார்காஸ்க்கும் தெரிவிக்கப்படுகிறது. புரட்சியாளர்களை அவர்களுடைய மறைவிடத்திலிருந்து வெளியே கொண்டு வரும் தந்திரமாக பிரேசிலின் நத்தல் பகுதியில் சர்வாதிகாரி வார்காஸால் யுத்தத்திற்காக இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீது யுத்தம் ஏவிவிடப்படுகிறது.

வார்காஸ் நினைத்தது போலவே மக்களை அழித்தொழிக்கும் இந்த யுத்தத்தை நாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்ற எண்ணத்திற்கு ப்றெஸ்ரெஸை கொண்டு வந்து விடுகிறது. ஆனால் அது சர்வாதிகாரி வார்காஸ் எங்களுக்காக தயார் செய்த பொறியாக இருக்கலாம் என மற்றத் தோழர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கிடையில் பல விவாதங்கள் நடைபெறுகிறது. ஒரு சாரார் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.ஆனால் ப்றெஸ்ரெஸ் மக்கள் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனக் கூறி களத்தில் இறங்கி விடுகிறார். இராணுவமும், கடற்படையும் தனக்கு ஆதரவாக இருக்குமென நம்புகிறார். ஆனால் சர்வாதிகாரி வார்காஸின் ஏற்பாட்டின்படி புரட்சிப்படை தோற்கடிக்கப்படுகிறது.அடுத்து கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களைக் கைது செய்யுமாறும், முக்கியமாக ப்றெஸ்ரெஸ்ஸை கைது செய்து சிறையில் அடைக்குமாறும் வார்காஸிடமிருந்து பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. புரட்சியாளர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதையின் மூலம் அவர்களிடமிருந்து மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகிறது. எல்லோரும் கைது செய்யப்படுகிறார்கள். ஆவணங்களும் கைப்பற்றப்படுகிறது. இறுதியில் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ம், ஒல்காவும் காட்டிக் கொடுக்கப்பட்டு தப்பிச் செல்வதற்கு வழியில்லாத நிலையில் கைது செய்யப்படுகிறார்கள்.

 

சிறையிலடைக்கப்பட்ட ஒல்காவுக்கு தான் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறது. தான் கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் மனைவியென்றும், தான் கர்ப்பமுற்றிருப்பதால் பிரேசிலிலேயே தன்னுடைய குழந்தையைப் பெறுவதற்கான அனுமதியும், வைத்தியரும், வழக்கறிஞரும் தேவையென்றும் வாதாடுகிறாள். கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயும், சகோதரியும் கூட ஒல்காவின் விடுதலைக்காக முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரேசிலிய அரசாங்கத்தால் ஒல்காவை விடுவிக்கும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப் படுகிறது. ஒல்காவை ஜேர்மனிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் தருணத்தை அது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

புரட்சிகர வாழ்க்கையில் சந்தேகங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடங் கொடுக்கலாகாது எனக் கூறி வந்த ஒல்கா, ஒரு தாயாகவோ, மனைவியாகவோ தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருக்காத ஒல்கா, இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாள். எதற்கும் அஞ்சாத, தற்துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவளுடைய செயற்பாடுகள் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலின் மூலம் முடக்கப்பட்டு விடுகிறது.

சிறையில் இருந்த பலமாதங்கள் நான் உன்னை இழந்துள்ளேன் என்று தாபத்துடன் கூறும் ஓட்டோ ப்ரோன்க்கு "குடும்பம் பிள்ளைகள் என்பவை எமக்கு இல்லை. நீ கைது செய்யப்பட முன்னரே நாம் அவை எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டோம்" என்று சொல்லும் போதும், அவனைச் சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தபின் 'நான் உன்னை மீட்டு வந்தது நீ எனது காதலன் என்பதனாலல்ல, புரட்சியில் நான் கொண்டிருந்த பற்று காரணமாகவே' எனக் கூறும் போதும் ஒல்காவின் பாத்திரத்;தை நாம் புரிந்து கொள்கிறோம். இதன் காரணமாக ஓட்டோ ப்ரோன்க்கும் அவளுக்குமிடையிலான முறிவும் ஏற்படுகிறது. சமூக மாற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் தம்மை அர்ப்பணித்தவர்களென்று சொல்லப்படும் ஆண்களிடம் இல்லாத சமூகப் பொறுப்பையும், புரட்சி மீதான பற்றையும் நாங்கள் இங்கே பெண்ணான ஒல்காவிடம் காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் அதே ஒல்காவால் கார்லோஸ் ப்றெஸ்ரெஸ்ஸின் காதலையும், அவனுடையதான உறவையும் தட்ட முடியாமல் போகிறது. அதுவொரு கடமையின் நிமித்தமா? அளவு கடந்த காதலின் நிமித்தமா? என்று கூட அவளுக்குப் புரியவில்லை. ஒரு சமயம் 'இந்த உறவு எனக்கு வெறுப்பாக உள்ளது, நான் திரும்பி மொஸ்கோவுக்கே போக வேண்டும், அங்கு என்னை எதிர்பார்த்து பல பணிகள் காத்திருக்கின்றன' என்று கூறும் ஒல்காவினால், மறுபுறத்தில் கார்லோஸின் காதலின் வேண்டுதலைப் புறக்கணித்துச் செல்லவும் முடியாதவளாக இருக்கிறாள்.

காதல், திருமணம் என்பது எல்லாக் காலத்திலுமே பெண்களை முடக்குவதாகத்தான் இருக்கிறது. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது. புரட்சிகர விடுதலை இயக்கங்களில் இணைந்து, ஆயுதம் ஏந்தி, ஆண்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்த வீராங்கனைகளைப் பற்றி அந்தந்த விடுதலை இயக்கங்களிலுள்ள ஆண்களிடம் நாம் கேட்டுப் பார்த்தோமானால், ஒருபோதும் அவர்கள் பெண்களின் வகிபாகத்தை, சாதனைகளை, சாகஸங்களைப் பற்றி நன்றாகச் சொல்வதில்லை. மாறாக இந்தப் பெண் போராளிகளால் தமக்குத் தொல்லைகளே அதிகம் என்றும், அவர்களால் எதுவும் ஆனதில்லை என்றும் கூறுவதைக் காணலாம்.

இது பெண்களின் வகிபாகத்தைப் புறக்கணிக்கும் ஆணாதிக்க மனேபாவத்திலிருந்தே எழுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைவிட இந்த விடுதலை இயக்கங்களில் இருக்கும் பெண்களின் வீரம், துணிவு, தன்முனைப்பு, சுயத்துவம் என்பன அவர்களின் திருமணத்தின் பின் காணாமற் போய் விடுகிறது. அதன் பின் அவர்கள் கணவனையும், சமுதாயத்தில் நிலவும் வறட்டுக் கலாசாரத்தையும் பாதுகாக்கும் பதுமைகளாகவும், அந்தந்த விடுதலை இயக்கத்திற்குப் புதல்வர்களைப் (புதல்விகளை அல்ல,) பெற்றுக் கொடுக்கும் தாய்மார்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

இந்த நிலையே இங்கு ஒல்காவுக்கும் ஏற்படுகிறது. மாபெரும் கொம்யூனிஸவாதியான கார்லோஸ் ப்றெஸ்ரெஸின் உறவு தன்னுடைய வாழ்க்கையில் தோற்றுப் போகும் சந்தர்ப்பத்தை அவளுக்கு ஏற்படுத்துகிறது. இறுதியில் அவள் குழந்தை, கணவன் என்ற உறவை ஏற்றுக் கொண்டாலும், அவளுடைய சுயம் அழிபட்டுப் போகிறது. ஒரு வீரஞ் செறிந்த பெண்ணை, சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து குழந்தைக்காவும், கணவனுக்காகவும் ஏங்குபவளாக மாற்றி விடுகிறது.பிரேசில் அரசாங்கம் தன்னுடைய கபட நாடகத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நேரத்தைக் குறித்துக் கொண்டு ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த ஒல்காவை ஹிட்லரின் பாசிஸப் பாசறைக்கு பரிசாக அளித்துத் தனது கொலைவெறியைத் தீர்த்துக் கொள்கிறது. ஒல்கா ஒரு யூதப் பெண்ணாக இருந்தமையே இதற்கான காரணம்.கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் ஒல்கா ஜேர்மனிய இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். சிறையிலேயே குழந்தையும் பிறக்கிறது. கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயார் மேற்கொண்ட முயற்சியினாலும், குழந்தை ஒரு பிரேசிலியன் என்ற காரணத்தினாலும் கார்லொஸ் ப்றெஸ்ரெஸின் தாயாரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது.

1939ஆம் ஆண்டு லிச்ரென்பர்க் முகாமிலிருந்து றவென்ஸ்ப்ரக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படும் ஒல்கா 1942ஆம் ஆண்டு பேர்ன்பக் சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக்கப்பட்டு நாசிகளால் கொலை செய்யப்படுகிறாள்

திரைப்படம் செல்வச் செழிப்புமிக்க ஒல்காவினுடைய பருவ வயதிலிருந்து, நாசிகளுடைய சித்திரவதை முகாமில் விசவாயுக் கூடத்துள் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் வரை மன அதிர்வை ஏற்படுத்திய வண்ணம் சிறந்த முறையில் நகர்ந்து செல்கிறது. ஒல்காவின் மனத்திடமும், எதனையும் எதிர்கொள்ளும் ஆளுமையும், உறுதியும், தன்னம்பிக்கையும், வாள் வீச்சுப் போன்ற கண்களும் இன்னமும் எனது மனதை விட்டு அகலாதவையாக உள்ளன. ஒல்கா பாத்திரத்தில் நடித்த கமீலா மொர்கொடோ ஒல்காவை எங்களுடன் வாழ வைத்து விட்டார்.

ஒல்கா திரைப்படம் ஒல்கா பெனாரியோவினுடையதும், பிரேசிலின் மாபெரும் கொம்யூனிஸ்டான லூயிஸ் கார்லோல் பிறெஸ்ரெஸினுடையதுமான அரசியல் வாழ்க்கையை பற்றி மட்டும் பேசவில்லை. அது அரசியல், போர், புரட்சி, அடக்குமுறை, அநீதி மற்றும் காதல் போன்றவற்றுடனான ஒல்காவின் வாழ்க்கையையும், பிரேசிலில் அவள் எதிர்நோக்கிய கொம்யூனிசப் புரட்சியின் தோல்வியையும் பேசிச் செல்கிறது.

வீரர்களுக்கு எப்போதும் அழிவில்லையென்று கூறுகிறோம். அப்படியானால் வீராங்கனைகள்?

பெர்னாண்டோ மொறாய்ஸ், றீற்ரா பூஸார், ஜெமி மொன்யர்டிம் போன்றவர்களால் அவர்கள் மீள வாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

 நன்றி -சரிநிகர். ஜனவரி - பெப்ரவரி. 2008 , மணிதர்சா

Sep 2008




Comment (1)  

Tuesday, September 02, 2008
Srilanka media news

srilanka-media-link

25 வது சர்வதேச காணாமல் போனோர் தினம்

 25 ஆவது சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு “பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல்போவோர் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் ஐ.நா. அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கை...

இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே பலவந்தமாக காணாமல்போவோரின் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Srilanka

There is a widespread pattern of enforced disappearances in Sri Lanka with several hundred cases reported in the last 18 months alone. In June 2008 the United Nations Working Group on Enforced or Involuntary Disappearances (WGEID) noted that in two months 22 people had disappeared, 18 of them in May. Families complain that fear of reprisals prevents many from reporting cases to the official bodies. By the end of 2007, 5,516 cases of enforced disappearances remained unresolved according to WGEID.

 15 May 2008 was the last day anyone saw Sebastian Goodfellow, a driver for the aid agency Norwegian Refugee Council (NRC). It is feared he has been abducted, possibly by an armed group operating with the tacit support of the security fo rces. NRC reported his possible enforced disappearance to the Cinnamon Gardens police station in Colombo. His family reported the same to the police in the eastern city of Batticaloa, where he is normally based. Sebastian’s case is not an isolated one. Professor Sivasubramanium Raveendranath, the Vice Chancellor of the Eastern University, disappeared from a high security zone in Colombo on 15 December 2006. Reverend Fr. Thiruchelvan Nihal Jim Brown disappeared in Allaipiddy parish in Jaffna on 20 August 2006. The cases of Sebastian Goodfellow, Professor Raveendranath, Reverend Brown and many others remain unsolved and must be promptly and impartially investigated.

 Perpetrators of enforced disappearances continue to walk free. Three Presidential Commissions of Inquiry into the Involuntary Removals and Disappearances of Persons were established in the 1990s. They received about 30,000 complaints. The proceedings of the Commissions were not made available to the public and the main recommendations, including the repeal of emergency regulations, were ignored. The Commissions submitted lists of suspected perpetrators but this resulted in only a handful of convictions. No independent body has been established to investigate these violations, giving perpetrators the confidence of impunity.

Recommendations

As the cases above demonstrate, enforced disappearance and impunity for such crimes is widespread throughout the Asia Pacific region. In the first instance all governments should officially condemn the use of enforced disappearance and make clear to all members of the police, military and other security forces that the practice will not be tolerated under any circumstances. In addition, Amnesty International calls on governments i n the Asia Pacific region to:

·         immediately end all enforced disappearances;

·         immediately reveal the fate and whereabouts of all persons subjected to enforced disappearance;

·         immediately release all surviving persons subjected to deprivation of liberty in violation of international law, unless they are charged with a recognizably criminal offence. Those who are not released must be brought promptly before a regular civilian court, charged with a recognizably criminal offence, and if remanded by the court, held in an official place of detention with access to lawyers, family members and the courts and given a fair trial without imposing the death penalty;

·         investigate all cases of enforced disappearance and ensure that the perpetrators are brought to justice, in fair trials without imposing the death penalty;

·         sign, ratify and implement the International Convention for the Protection of All Persons from Enforced Disappearances and make enforced disappearance a criminal offence under national law. States should also make the declarations set out in articles 31 and 32, recognizing the competence of the UN Committee against Enforced Disappearances;

·         Victims of enforced disappearance, which includes the families of disappeared persons, must be assured full reparation for their suffering.

 

http://www.amnesty.org/en/news-and-updates/news/25-years-remembering-the-disappeared-20080829 .

 

 Sep 2008

Comment (1)  

Monday, September 01, 2008
iran womens

http://www.amnesty.org/

Iran: End pressure on women’s rights defenders campaigning for an end to discrimination

On the second anniversary of the launch of the Campaign for Equality on 27 August, Amnesty International is renewing its demand that the Iranian authorities cease harassing and imprisoning women’s rights defenders and to restrict their campaigning activities for the repeal of laws and policies which discriminate against women in Iran.

The Campaign for Equality is a network of individuals working to end legal discrimination against women. The campaign informs women of their rights, and is aiming to collect one million signatures from the Iranian public to a petition against discriminatory laws.

Two years into the campaign, women’s rights defenders are facing increasing repression as they try to take their demands for equal treatment to the broader population while the authorities continue to impose restrictions on their use of public space to carry out their peaceful and legal activities.

http://www.amnesty.org/en/news-and-updates/iran-end-pressure-women-s-rights-defenders-20080827

comments  

Sunday, August 31, 2008
interview-malathi maithiri

மாலதி மைத்ரியுடனான நேர்காணல்

பேட்டி-1

கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் கலந்துவிட்டு வந்திருக்கிறீர்கள்.பெண்கள் சந்திப்பு அனுபவங்கள் எப்படியிருந்தன?

ஐரோப்பிய பெண்கள் சந்திப்புப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்கள் சந்திப்பு மலர்கள், சந்திப்புகள் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகள் என பெண்கள் சந்திப்பு பற்றிய விடயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் பெண்கள் கூடிக் கூடிப் பேசிக் கலைகிறார்களே எந்த விதமான ஆக்கபூர்வமான, திருப்திகரமான செயல்பாடுகள் எதுவும் இல்லையே என்று பெண்கள் சந்திப்பு மீதான ஒரு தொடர் குற்றச்சாட்டு பொதுப்பரப்பில் இருந்த வண்ணமே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன என நான் எண்ணுகிறேன்.

தமிழ்நாட்டிலோ அல்லது இலங்கையிலோ இவ்வாறாகப் பெண்கள் சந்திப்பு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஐரோப்பாவுக்கு வந்த பின்பு பெண்ணியவாதிகளுடனோ பெண்ணிய இலக்கியங்களுடனாகவோ பரிச்சயம் ஏற்பட்டு இவற்றின் மூலமாக ஒரு கோட்பாடு அறிமுகமாகும் போது நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்கில், ஆர்வத்தில் இப் பெண்கள் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். சாத்தியமில்லாத ஒரு விடயத்தை இவர்கள் இத்தனை தூரம் சாத்தியமாக்கியதே ஒரு பெரிய விடயம் என நான் எண்ணுகிறேன்.

தொடர்ந்து 18 வருடங்களாக பெண்கள் சந்திப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதே மகிழ்ச்சி தரும் செய்திதான். பெண்கள் சந்திப்பின் மூலம் பல நல்ல முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. சிலரின் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்க்கும் பல படைப்பாளிகளை அடையாளம் காண்பதற்கும் இச் சந்திப்புகள் உதவியாக இருந்திருக்கின்றன. மற்றும் ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கும் பல பெண்கள் ஒன்று சேர்ந்து பல விதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழல் கூட புத்துணர்சியை, உற்சாகத்தைத் தரும் விடயமாகவே நான் கருதுகிறேன்.

கனடா பெண்கள் சந்திப்பு வெறும் புலி எதிர்ப்புப் சந்திப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது எனச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்நதி தனது வலைப்பூவில் விமர்சித்திருக்கிறாரே?

சந்திப்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. தமிழ்நதி குறிப்பிடும் நிர்மலாவின் கட்டுரை மட்டுமே முழுக்க முழுக்க தமிழ்த் தேசியக் கட்டமைப்பில் பெண்களின் நிலை பற்றியிருந்தது. அவரின் கட்டுரையில் “அரச பயங்கரவாதம் எந்த அளவுக்கு பேசப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு புலிகளின் பயங்கரவாதமும் பாஸிச அரசியலும் பேசப்பட வேண்டும்” என்ற கருத்தை நிர்மலா முன்வைத்தார். அவரின் உரையை ஒட்டித்தான் தமிழ்நதி குறிப்பிடும் ‘புலி எதிர்ப்பு’ விமர்சனங்கள் அரங்கில் எழுந்தன. அத்தோடு அது முடிந்தது. பிற பேச்சாளர்கள் பல தளங்களில் பெண்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம், சமூகவியல், அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், மொழி - இனம் சார்ந்த ஒடுக்கு முறைகள் பற்றிப் பேசினார்கள். ஆகவே இதை ஒட்டு மொத்தமாக ‘புலி எதிர்ப்பு’ சந்திப்பு எனக் குறுக்கிவிடுவது நேர்மையான விமர்சனமாகாது.

பெண்கள் சந்திப்பைத் தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல, தமிழ் தேசியச் சார்பற்றவர்கள், பல்வேறு மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் என அனைவரும் பங்கு பெறும் கருத்துச் சுதந்திரம் பேணும் பெண்ணிய நிகழ்வாகவே நான் கருதுகிறேன். ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டு ‘புலி எதிர்ப்பு’ என்று கூறிவிட முடியாது என நான் கருதுகிறேன்.

தொடர்ந்து வாசிக்க (நன்றி: சத்தியக்கடதாசி)


பேட்டி-2

இந்த பெண்கள் சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்வதற்கு உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது?

பெண்கள் சந்திப்பைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். உலகளாவிய ரீதியில் பெண்கள் இப்படி சந்திப்பை நடத்துவது மிகவும் சிறப்பான விடயமாகும். ஆனால் இம்முறைதான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எங்களுக்கான பிரச்சனைகள் வரும்போது அதைப்பற்றி கலந்து பேசி அதனை எப்படி எதிர்கொள்வது அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்ற ஒரு தயாரிப்புக்கு பெண்கள் சந்திப்பு உதவி புரிகிறது.  நாம் கூடிப் பேசும் போது சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வழிகள் தென்பட வாய்ப்புக் கிடைக்கின்றது. இனிவரும் காலத்தில் உலகம் சார்ந்த பெண்கள் சார்ந்த ஒடுக்குமுறைகள் புதிய பிரச்சனைகள் பற்றிய எமது கருத்துக்களையோ, கண்டனங்களையோ தெரியப்படுத்துவதற்கு எமது உரிமைகள் பற்றியோ மற்;றும் நடைமுறை விடயங்கள் பற்றியோ பேச குரல் எழுப்புவதற்கு ஒரு நல்ல முன்னெடுப்பு மையம் என எண்ணுகின்றேன்.

விபரம் (நன்றி: வைகறை)

Comment (1)  

Saturday, August 30, 2008
selvi memor

மாபெரும் உலக அதிகாரம் கனவுகளை அழிக்கக்கூடிய ஆயுதத்தை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை. அத்தகையதோர் ஆயுதத்தை அது கண்டுபிடிக்கும் வரையில் நாம் தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருப்போம் -அதாவது நாம் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருப்போம். - Zapatistas இன் துணைத் தளபதி மார்க்கோஸ்
செல்வியின் 17வது வருட நினைவு
 புரளும் நினைவு ... மறக்க, மறைக்க முடியுமா?


 

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்
........

திட்டங்களில் புதைந்துபோன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.
மூச்சுத் திணறும்  இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாது

-செல்வி-

1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் புலிகளால் செல்வி கைது செய்யப்பட்டு காணாமல் போய் 17 ஆண்டுகளாகின்றன. செல்வி வவுனியா சேமமடுவில் பிறந்தவர். இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கியல் மாணவியுமாவார். இவர் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளதுடன்  கவிஞராகவும் திகழ்ந்துள்ளார்.  ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பாக வெளிவந்த சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. International PEN என்ற  கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு 1992ம் ஆண்டுக்கான  தனது சிறப்பு பரிசை கவிஞர் செல்விக்கு வழங்கியது. அராஜக அரசுகளால் சிறையில் வைக்கப்பட்ட -தஸ்லிமா நஸ்ரின் போன்ற- சமூகப் புத்திஜீவிகள் பலருக்கு இப் பரிசு விடுதலையை வாங்கிக் கொடுத்தது. ஆனால் செல்வியை விடுதலைப் புலிகளிடமிருந்து இது மீட்டுத்தரமுடியாமல் போனது. இது சர்வதேச ரீதியில் கவனத்துக்குள்ளானது.

செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் சேவைபுரிந்தமைக்காகவும் சிறந்த போராட்ட கால இலக்கியங்களை உருவாக்கியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.  மானுட விழுமியங்களை நோக்கிய அவரின்; ஆத்மாவின் குமுறல்களை அவரின் எழுத்துக்களில் காணலாம். ஆயுதக் கலாச்சாரத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மௌனம் காத்து ஒதுங்கியோர் மத்தியில் நியாயத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த செல்வி என்கின்ற அந்தக் கவிஞரைத் தொலைத்து 17 வருடங்கள் எந்தவித சலனமுமின்றி கழிந்திருப்பது எமது சமூகத்தின் ஜனநாயகத்தைக் கோடிடுகிறது. அவரது இழப்பு வரலாற்றில் பதியப்பட வேண்டியது. நினைவில் மீட்கப்பட வேண்டியது

அவரது நினைவாக அவரின் கவிதை ஒன்று

அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்

காலைப்பொழுதுகளில் 
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற்சிணுங்கியில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது

விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன.
அவை என்மீது விழுந்துவிடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கிறேன்.
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத்தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன

திட்டங்களில் புதைந்துபோன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.
மூச்சுத் திணறும்  இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாது

நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.

 

Aug 2008

Comments (2)  

Friday, August 29, 2008
calmy rey

நன்றி- swissinfo.

Call for dialogue stirs trouble for Calmy-Rey

Swiss Foreign Minister Micheline Calmy-Rey is attracting negative publicity after mentioning the name Osama bin Laden in a speech to ambassadors earlier this week.

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் பல்வேறு முரண்பாடுகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலமே காத்திரமான தீர்வினை எட்ட முடியும் எனச் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் Calmy-Rey தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களின் போது இரண்டு தரப்புக்களினதும் கருத்துக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள், ஹிஸ்புல்லா, கொலம்பிய விடுதலை இராணுவம் போன்ற அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சுவிட்சர்லாந்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.அத்துடன் ஏனைய நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்து எந்தவொரு அமைப்பையும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து வெளிநாட்டு தூதுவர்களின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் என்பதன் மூலம் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தப்படாது எனவும் சர்வதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் வகையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கச் சுவிட்சர்லாந்து தயார் என Calmy-Rey  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத்தை இல்லாதொழிக்கும் வகையில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயார் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கு உலக நாடுகலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக  சுவிஸ் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க http://www.swissinfo.ch/eng/front/Call_for_dialogue_stirs_trouble_for_Calmy_Rey.html?siteSect=106&sid=9619954&cKey=1219865991000&ty=st 

 

 

comments  

Thursday, August 28, 2008
vanni - 03

 இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐயாயிரம் தற்காலிக கூடாரங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலகம் கோரியுள்ளது...

வன்னியில் மேலும் மூவாயிரம் குடும்பங்கள் இடம்பெயரும் அபாயம் -5000 தற்காலிக கூடாரங்கள் அவசரமாக அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6245 


அப்பாவித் தமிழ் மக்களின் பயங்கரமான நிலையை பக்கச்சார்பின்றி வெளிக்கொணரும் வாய்ப்புக்களை ஊடகத்துறையினரை வன்னிக்கு நுழையவிடாது தடுத்து நிறுத்தி மறுப்பதே இலங்கை அரசின் நீண்ட கால அடக்குமுறையின் இது தான் பேரினவாதத்தின் சூழ்ச்சி...


அதிகாரிகள், உதவி அமைப்புகள் வன்னியில் பெரும் திண்டாட்டம்
அகதிகளின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவலம்

http://www.thinakkural.com/news/2008/8/28/mainnews_page56959.htm 

Aug 2008

comments  

Next Page


<< September 2008 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05 06
07 08 09 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30

ARCHIVE/உள்ளீடு

paintings of
vasuki
arunthathi
moniha
suganthi
arathy



பேசும் படம்
(click here to enlarge)




இரு மொழி நாடகம்
from march to sept.




கவிஞைகள்
கவிதைகள்

 "poets-poems"


poems on other languages

கட்டுரை
 "articles"


சிறுகதை
 "stories"


விமர்சனம்
 "criticism"


செவ்வி
 "interviews"


இதழியல்
 "book introductions"


பதிவு
 "diary"


உரையாடல்
 "discussion"


சினிமா/குறும்படம்
 "cinema/short film"


அரங்கியல்
 "drama"


மடல்
 "letters"


அறிவிப்பு
 "infos"


வேண்டுகோள்
 "request"





book collection

வேண்டுகோள் : பெண் படைப்பாளிகள் தங்களது நூல்களை மின்நூல் வடிவில் எமக்கு அனுப்பினால் இந் நூலகத்தில் சேகரமாகும்



கமரா மொழி




இணையசாலை




பெயரிடல்







   






தமிழில் சுவிஸ் செய்திகள்







If you want to be updated on this weblog Enter your email here: